Sat. Apr 20th, 2024

இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும்

அண்ணாசிலையடி வள்ளுவர் சன சமூக நிலைய ஆதரவுடன் அண்ணாசிலையடி இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர் தாமன் சதாசிவம் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்படும் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அண்ணாசிலையடி இளைஞர் விளையாட்டுக் கழகத் தலைவர் சோ.பாரத் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி வே.கமலநாதன்,  சிறப்பு விருந்தினர்களாக பரமேஸ்வரி ஜூவல்லரி உரிமையாளர் ந.இலட்சுமிகாந்தன், அண்ணாசிலையடி வள்ளுவர் சன சமூக நிலைய தலைவர் ச.தீபராசா,  வடமராட்சி உதைபந்தாட்ட லீக் தலைவர் தி.வரதராஜன்,  கெளரவ விருந்தினர்களாக கரணவாய் மணியகரன் தோட்டம் அ.தி.மு.க.க.பாடசாலை ஆசிரியர் ந.நந்தன்,  கரணவாய் ஜெ/350 முன்னாள் கிராம அலுவலகர் வ
தயானந்தா,  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ச.கிருபாகரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்