Thu. Apr 25th, 2024

இரண்டாவது T20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளால் வென்ற இந்தியா

இன்று இடம்பெற்ற இரண்டாவது T20 ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட் விதியாசத்தில் இந்தியா அணி வெற்றிகொண்டுள்ளது.
முதலில் இந்தோரில் இன்று இடம்பெற்ற இரவு ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. இதை அதிக பட்சமாக குஷால் பெரேரா 34 ஓடங்களையும் ,பெர்னாண்டோ மற்றும் குணாதிலக ஆகியோர் தலா 22 மற்றும் 20 ஓட்டங்களை முறையே பெற்றனர். பந்து வீச்சில் தாகூர் 4 ஓவ்ர்கள் பந்து வீசி 23 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
பின்னர் துடுப்பெடுத்தாடவந்த இந்தியா அணி 17.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது.இதை ராகுல் 45 ஓடங்களையும் அணித்தலைவர் விராட் கோலி ஆட்டமிளக்காமல் 30 ஓடங்களையும் பெற்றனர்.பந்து வீச்சில் ஹசரங்க 4 ஓவர்கள் பந்து வீசி 30 ஓடங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் அணித்தலைவர் லசித் மலிங்க 4 வர்கள் பந்து வீசி எந்த வித விக்கெட்டுகளும் எடுக்காமல் 41 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தார்.

முதல் போட்டி மழையால் இராது செய்யபட்ட நிலையில் தற்பொழுது இந்தியா அணி 1-0 என்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் புனேயில் வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்