இன்று பிற்பகல் முதல் எரிபொருளின் விலைகள் அதிகரிப்பு
இன்று (26) பிற்பகல் 2 மணிமுதல் கனியவள கூட்டுதாபன எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எரிபொருளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படவுள்ளது.
இதன்படி 92 ரக பெற்றோல் – 50 ரூபாவால் அதிகரித்து 470 ரூபாவாகவும், 95 ரக பெற்றோல் – 100 ரூபாவால் அதிகரித்து 550 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் – 60 ரூபாவால் அதிகரித்து 460 ரூபாவாகவும் , சுப்பர் டீசல் – 75 ரூபாவால் அதிகரித்து 520 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.