Thu. Apr 25th, 2024

இடமாற்றம் தொடர்பான முறைப்பாடுகள் இறுதித் திகதி

வடமாகாணத்திற்குட்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர் சேவையில் வருடாந்த இடமாற்றம் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் வலயக் கல்வி அலுவலகங்களால் இம்மாதம் 31ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு  முன்னதாக மாகாண கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு வடமாகாண கல்வித் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த இடமாற்ற சபையின் மீளாய்வு கோரிக்கைகள் உரிய திகதியில் தங்களுக்கு கிடைக்கப் பெற்றமை மற்றும் தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு எமக்கு அனுப்பி வைக்கப்படாமல் தவற விடப்பட்ட விண்ணப்பங்கள் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படாமல் இருப்பினும் குறித்த காலத்திற்கு முன்னதாக  அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வலயக் கல்வி பணிமனையில் சமர்ப்பிக்கப்பட்ட மீளாய்வு விண்ணப்பங்கள் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என முறைப்பாடுகள் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதால், இனியும் வலயக் கல்வி அலுவலகங்களால் தவறவிடப்படும் விண்ணப்பங்களுக்கு தாங்களே பொறுப்பாளிகளாவீர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்