Sat. Apr 20th, 2024

ஆடுகளை களவாடிய வாகனம் துன்னாலையில்

பருத்தித்துறை பொலீஸ் பிரிவில் ஆடுகளை கடத்திய வாகனம் நெல்லியடி பொலீஸ் பிரிவில் இன்று மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலீஸ் பிரிவில் கால்நடைகளில் குறிப்பாக ஆடு களவாடப்பட்டு வருவதாக பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமது விசாரணையை தொடர்ந்த பொலீஸாரால் கடத்தலுக்கு பயன்படுத்திய மகேந்திரா படி வாகனம் நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.  இதனையடுத்து நெல்லியடி பொலீஸாரின் உதவியுடன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் விசாரணை நடைபெற்று வருகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்