Fri. Apr 26th, 2024

அருணோதயா Royal அணி சம்பியன்

அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்ட  APL சீசன் 2  போட்டியில் அருணோதயா Royal அணி வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் நேற்று முன்தினம் அரியாலை கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் அருணோதயா Rising Star அணியை எதிர்த்து அருணோதயா Royal அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அருணோதயா Rising Star அணி நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து  39 ஓட்டங்ளைப் பெற்றது. அவ்வணி சார்பில்  யதீசன்12 ஓட்டங்களையும்,  தயேஸ்10 ஓட்டங்களையும், சுரேன்10ஓட்டங்களையும், பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் அருணோதயா Royal அணி சார்பில் தினேஸ் 2 விக்கெட்டுகளையும், ரஞ்சித் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 39 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அருணோதயா Royals அணியினர் 7 ஓவர்கள் முடிவில் வெற்றியிலக்கை அடைந்தனர்.  அவ்வணி சார்பில்  ரஞ்சித் 23 ஓட்டங்களையும்,  பாலு 12 ஓட்டங்களையும், பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் கிருபன் ஒரு விக்கெட்டையும், திலக்ஸன் ஒரு விக்கெட்டையும்  கைப்பற்றினர். ஆட்டநாயகன் ரஞ்சித் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக முன்னாள் யாழ் மாவட்ட துடுப்பாட்ட அணியின் தலைவரும்,  சர்வதேச கரப்பந்தாட்ட மத்தியஸ்தருமான நல்லையா சுதேஸ்குமார், கிரிக்கெட் வீரரும், 6ம் வட்டார மாகாண சபை உறுப்பினருமான ப.பத்மமுரளி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்