அமரர் இராஜநாயகம் சிறிதரன் அவர்களின் நினைவு கூரப்பட்டது
விளையாட்டு வித்தகன் யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவனும், யாழ் பல்கலை கழகத்தின் விஞ்ஞானபீட பழைய மாணவனுமான அமரர் இராஜநாயகம் சிறிதரன் அவர்களை நினைவுகள் சுமந்து அவர் கடந்துவந்த விளையாட்டுத்துறை சாதனைகளை சமூகத்தில் விதைக்க வேண்டும் என்ற நோக்கில் நண்பர்களின் நிதிப்பங்களிப்பில் துடுப்பாட்ட சுற்றுப்போட்டி அராலி விளையாட்டுப் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டது.
விளையாட்டுப்பேரவையின் இணைப்பாளர் பழனித்துரை தர்மகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமரரின் தந்தை, உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளரும் சரஸ்வதி மகா வித்தியாலய பழைய மாணவ சங்க செயலாளருமான க. குமாரசாமி, வட்டு மத்திய கல்லூரி அதிபரும் வாழ்நாள் ஆசானுமாகிய சிவஞானபோதம் ஆகியோர் ஒளி ஊட்டி வைத்தனர்.
தொடர்ந்து சகோதரனும் நண்பர்களும் ஒளி ஊட்டி சிறிதரனின் நினைவலையில் சங்கமித்து நினைவுரை ஆற்றப்பட்டு போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.