Sat. Apr 20th, 2024

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் சி.அ.ஜோதிலிங்கம் தெரிவிப்பு

தமிழ் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டாலே ஆக்கிரமப்பிலிருந்து விடுபட முடியும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியம் சமூக விஞ்ஞான ஆய்வு மைய நிறுவுநருமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்சவின் வருகையின் பின்னர் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களுடனும் ஒரு நல்லுறவை வைத்துக்கொள்வது போன்று ஒரு தோற்றப்பாட்டை காட்ட அவர் முயல்கின்றார்.அவ்வாறு காட்ட வேண்டிய தேவையும் உள்ளது இதே வேளை அனைத்து எதிர் கட்சிகளும் இணைந்து ஒரு மாநாட்டை அண்மையில் கூட்டியிருந்தது

அதில் தமிழ் மக்களது பிரச்சினைகள் கடந்த காலத்தில் கவனிக்கப்படவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் எதிர் கட்சிகளிடம் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் அது தொடர்பில் சம்பிக்க ரணவக்க உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டுவிட்டு
தனியாக பயணிக்க முடியாது
அரசும் எதிர்கட்சிகளும்
தமிழ் மக்களை விட்டுவிட்டு பயணிக்க முடியாத இந்நிலையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள்,
பொறுப்பு கூறல் ஆக்கிரமிப்புகள்,
இயல்பு நிலையை உருவாக்குதல்
மற்றும் அன்றாட பிரச்சினைகளை ஒன்றிணைந்து முன்வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்