Fri. Apr 19th, 2024

அண்ணாசிலையடியிடம் மண்டியிட்டது டைமன்ஸ்

நவசக்தி விளையாட்டுக் கழகம் நடாத்திய 40 வயதிற்கு மேற்பட்ட அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட தொடரில் அண்ணாசிலையடி விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டத்தில் அண்ணாசிலையடி அணியை எதிர்த்து வதிரி டைமன்ஸ் அணி மோதியது.  முதல் பாதியாட்டத்தில் அண்ணாசிலையடி விளையாட்டுக் கழகத்தின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் வதிரி டைமன்ஸ் அணியினர் திணறினர். இதனால் முதல் பாதியாட்டத்தில் அண்ணாசிலையடி விளையாட்டு வீரர்கள் திலீபன் மற்றும் லங்கா ஆகியோர் இவ்விரு கோல்களைப் போட்டு 4:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர். இரண்டாவது பாதியாட்டத்திலும் அண்ணாசிலையடி வீரர்களின் ஆட்டத்தை கட்டுப்படுத்த டைமன்ஸ் அணியினர் போராடிய போதிலும் கைகூடவில்லை. தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அண்ணாசிலையடி வீரர் சுதா இரண்டாவது பாதியாட்டத்தில் இரு கோல்களைப் போட ஆட்ட நேர முடிவில் அண்ணாசிலையடி அணி 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். இதில் சிறந்த கோல் காப்பாளராக அண்ணாசிலையடி வீரர் சத்தியேந்திரன், சிறந்த தடுப்பாளராக அண்ணாசிலையடி வீரர் சந்திரமோகன், சிறந்த ஆட்ட நாயகனாக அண்ணாசிலையடி வீரர் சுதாகரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்