அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி
அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி நாளை வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி அருள்மறியா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.சாரங்கன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய பங்குத் தந்தை மைக்கல் ஏ.ஆர்.பி.செளந்தரநாயகம், அச்சுவேலி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏன்.யூ.பிநியந்த, கெளரவ விருந்தினராக யாழ்ப்பாண தலைமை அலுவலக மக்கள் வங்கி முகாமையாளர் திருமதி.றொசற் மெலானி தவநாயகம் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.