Tue. Apr 16th, 2024

அச்சுவேலியில் மாணவி கூட்டு பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கிய சம்பவம்

அச்சுவேலி பகுதியில் இயங்கும் பாடசாலையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவியை கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.

அச்சுவேலி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட அச்சுவேலி சான்றிதழ் பெற்ற பாடசாலைக்கு செல்லும் வீதிக்கு அருகாமையில் உள்ள பற்றைக்குள் வைத்தே மாணவி கூட்டு வல்லுறவுக்குட்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.
அச்சுவேலி பகுதியில் இயங்கும் பாடசாலையில் தரம் 10ல் கற்கும் 15 வயதுடைய சிறுமியே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மேலதிக வகுப்பு பாடசாலைக்கு நடைபெறுவதாக கூறி குறித்த மாணவி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். இவர் தாயாரின் சகோதரியின் வீட்டிலும் தங்கியிருப்பதனால் அன்று வீட்டிற்கு மாணவி திரும்பாதையிட்டு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை குறித்த பற்றைக்குள் முனகல் சத்தம் வந்ததையடுத்து அச்சுவேலி பொலீஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது. குறித்த மாணவியை பொலீஸார் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக அச்சுவேலி பகுதியிலுள்ள பல இடங்களில் இருந்து சில இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்