வைத்தியசாலை கட்டிடத்திலிருந்து பாய்ந்து இளைஞன் தற்கொலை. மட்டக்களப்பில் சம்பவம்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலை கட்டிடத் திலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துள்ளான்.
குறித்த இளைஞன் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தரென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு பழுகாமம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மயூரன் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த தற்கொலை சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.