Sat. Apr 20th, 2024

வேட்டிக்குள் கிடந்த தாலியால் திக்கத்தில் பதற்றம்

வடமராட்சி திக்கம் வடிசாலைக்கு அருகாமையில் துயாஸ்கரன் என்பவரது சையிக்கிள் திருத்தும் கடையில் ஐந்தரைப் பவுண் தாலிக் கொடி கிடந்ததைக் கண்டு அப்பகுதியில் பலர் ஒன்றுகூடியமையால் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இச்சம்பவம் சற்று முன்னர் நடைபெற்றது.
சையிக்கிள் திருத்தும் கடை உரிமையாளர் இன்று கடையைத் திறந்த போது தாலிக்கொடி இருப்பதை தொடர்ந்து காங்கேசன்துறை பொலீஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
பளைப் பகுதியில் வசிக்கும் குறித்த கடை உரிமையாளரின் மனைவியால் தற்போது திருடர்கள் பயத்தால் வேட்டிக்குள் தாலியை மறைத்து வைத்துள்ளார்.
இதையறியாத கணவன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வேட்டியை திக்கம் பகுதியில் உள்ள தனது கடைக்கு கொண்டு வந்து கடை முடிந்த பின்னர் வேட்டியை கட்டிக் கொண்டு கோயிலுக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து காலை கடையை திறந்த போது தாலிக் கொடி கிடந்ததை அவதானித்தவர் பதற்றமடைந்துடன்,  அங்கிருந்த பொது மக்களால் பொலீஸாருக்கும், அப்பகுதி கிராம அலுவலகருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் குறித்த விடயம் தொடர்பாக தனது மனைவிக்கு தெரியப்படுத்தியதையடுத்து மனைவியால் வேட்டிக்குள் தாலிக்கொடி  மறைத்து வைக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் குறித்த கடைக்காரரிடன் தாலிக் கொடி தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் பெறப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்