வேகமாக சென்ற கார் வீட்டுக்குள் புகுந்தது, நெல்லியடியில் சம்பவம்
இன்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் பருத்தித்துறை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கார் நெல்லியடி நகரத்தை அண்டிய பருத்தித்துறை பக்கமாக வீதிக்கு அருகாமையில் இருந்த வீட்டின் தகரங்கள் எல்லாம் உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் புகுந்து உள்ளது. இந்த சம்பவத்தால் எந்தவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்துக்கு காரணமான கார் சேதமடைந்துள்ளது. தற்பொழுது நெல்லியடி பொலிசார் அவ்விடத்திற்குச் சென்று விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.


