Thu. May 21st, 2026

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய உற்சவம் நடாத்த நீதி மன்று அனுமதி

நெடுங்கேணி ஒலுமடு ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த  உற்சவத்தை தடுக்கக் கோரி நெடுங்கேணிப் பொலிசாரினாலும் தொல்லியல் திணைக்களத்தினாலும் வவுனியா நீதிமன்றத்தில் கோரப்பட்ட விண்ணப்பம்  நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது. ஆலய உற்சவத்தை வழமைபோன்று நடாத்தவும் மன்று அனுமதி. திருவிழாக்காலங்களில் ஆலய நிர்வாகத்தினருக்கு எதுவித இடையூறோ  அச்சுறுத்தலோ செய்யக்கூடாது எனவும்  நெடுங்கேணி பொலிசாருக்கு நீதவான் பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில்  ஜனாதிபதி சட்டத்தரணி சிற்றம்பலம்  தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணி காண்டீபன், சிரேஷ்ட சட்டத்தரணி தயாபரன், சிரேஷ்ட சட்டத்தரணி திருவருள், சிரேஷ்ட சட்டத்தரணி குருஸ், சிரேஷ்ட சட்டத்தரணி யூஜின் ஆனந்தராஜா உள்ளிட்ட பதினாறு சட்டத்தரணிகள் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed