விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டு விழா

விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டு விழா பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.
இலங்கை வாழ் மக்கள் இலவச சுகாதார சேவைகளின் பயன்களை கிடைக்கச் செய்யும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நெதர்லாந்து அரசின் இலகுக் கடன் உருவாக்கப்படவுள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான நாட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்ண அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.


