விபச்சார விடுதி பொலிஸாரால் முற்றுகை!! -2 பெண்கள் கைது-

கொழும்பு கல்கிஸ்ஸை – இந்திராஜோதி வீதியில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இம்முற்றுகையின் போது அங்கிருந்த இரண்டு பெண்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடம்கொட – நோனாகம பகுதியை சேர்ந்த 24 மற்றும் 26 வயதுகளையுடைய இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிசார் சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.