வாள், குண்டுகளுடன் இருவர் கைது
வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவரை கோப்பாய் பொலீஸார் இன்று (4) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடத்தில் வாள் மற்றும் கைக் குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்களிடத்தே மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் குறித்த நபர்கள் கோண்டாவில் பகுதியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.