Fri. Apr 19th, 2024

வவுனியா மாவட்ட செயலர், வடமாகாண பிரதம செயலாளராக நியமனம்

வடமாகாண பிரதம செயலாளராக எஸ்.எம்.சமன்பந்துலசேன நியமிக்கப்பட்டிருக்கின்றார். முன்னாள் பிரதம செயலர் பத்திநாதன் ஓய்வு பெற்றுச் சென்றதை தொடர்ந்து புதிய பிரதம செயலர் பதவிக்கு வடக்கிலுள்ள அதிகாரிகள் சிலர் முண்டியடித்ததுடன்,  ஆங்காங்கே சண்டைகளும் இடம்பெற்றிருந்த நிலையில் வவுனியா மாவட்டச் செயலர் எஸ்.எம்.சமன் பந்துலசேன மாகாண பிரதம செயலாளராக ஜனாதிபதி  கோட்டபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை இவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது

தெய்வேந்திரன் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுவிட்டதாகவும் அதற்கான பரிந்துரையை அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கிவரும் தனியார் அமைப்பு முன்வைத்திருப்பதாகவும் அதனால் தெய்வேந்திரன் சில நாட்களில் பதவி ஏற்பார் என்று நியூஸ் தமிழ்  உட்பட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. குறித்த தகவலை வடக்கின் உயர் செயலகம் ஒன்றில் பணியாற்றும் தெய்வேந்திரனுக்கு நெருக்கமான பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரி ஒருவர் வெளியிட்டிருந்தார்.

தெய்வேந்திரன் தெரிவு செய்யப்பட்டிருந்தபோதிலும் அதனை நடைமுறைப்படுத்துவற்கு வடக்கின் அதி உயர் பீட அதிகாரி கடும் ஆட்சேபனை வெளியிட்டுவந்த நிலையில் நேற்று  வவுனியா மாவட்டச் செயலர் சமன் பந்துலசேன குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்