வவுனியாவில் விமானப்படை 10 பேருக்கு கொரோனா
இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப்படையை சேர்ந்த 10 பேருக்கே தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று (19) யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 293 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கு Covid-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது