வரணி பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இலங்கை போக்குவரத்து சாலையில் பணிபுரியும் வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை தனது தேவை நிமித்தம் வடமராட்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது வடமராட்சி நோக்கி எதிரே வந்த வாகனம் மோதிய விபத்தில் இத்துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இவ் விபத்து சம்பவத்தில் அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த சத்தியநாதன் சத்தியானந்தன் (வயது 34) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் .
விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை நோயாளர் அவசரகாவு வண்டியில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.