Sat. May 24th, 2025

வன்டேஜ் எவ் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட  போட்டியின்  இறுதியாட்டம் நாளை

பருத்தித்துறை லீக் கழகங்களுக்கு இடையிலான வன்டேஜ் எவ் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட  போட்டியின்  இறுதியாட்டம் நாளை  திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு உதய சூரியன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது .
இதன் இறுதியாட்டத்தில் கொழுக்குழாய் சக்திவேல் அணியை எதிர்த்து உடுத்துறை செந்தமிழ் அணி மோதவுள்ளது. பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் தலைவர் எம். நவநீதமணி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு பிரதம  விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஜவ்வர்உமர் , சிறப்பு விருந்தினர்களாக மருதங்கேணி பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரன், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப செயலாளர் ஏ.அருளானந்தசோதி, மருதங்கேணி கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ். திரவியராசா, ஆகியோர் கலந்து கொள்ளவுள்னர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்