Sat. Apr 20th, 2024

வடமாகாண பாடசாலைகள் இயங்கும்- வரதீஸ்வரன்

தற்கால சூழ்நிலைக்கேற்ப இயங்கக் கூடிய பாடசாலைகளை நடாத்துமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும் நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,  அதிபர், ஆசிரியர்கள் ஊரடங்கு நேரத்தைக் கருத்தில் கொண்டு பாடசாலைகள் முடிவடையும் நேரத்திற்கு முன்னதாக நிறைவடைவதை குறித்த பாடசாலை அதிபர்களே தீர்மானம் எடுத்து நடைமுறைப்படுத்தவும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் ஆசிரியர்கள் மாணவர்கள் தத்தமது நிலைகளை கருத்தில் கொண்டு செயற்படவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று வியாழக்கிழமையும் தமது போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளனர். இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் போராட்டத்தை நேற்று முதல் கைவிடுவதாகவும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் மேல்மாகாணம் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்