வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வெளியிடப்படும் பொய்யான தகவல்கள்.
வடமாகாண பாடசாலை அதிபர்கள் வரவு தொடர்பாக கல்வி அமைச்சுக்கு பொய்யான தகவல்களை வடமாகாணம் வெளியிட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வட மாகாண கல்விப் பணிப்பாளர் செ. உதயகுமார் அவர்களின் அதிபர் ஆசிரியர் பணிதவிர்ப்பு போராட்டம் தொடர்பாக கல்வியமைச்சுக்கு அனுப்பிய பொய்யான தரவுகள் வழங்கியமை தெரியவந்துள்ளது.
மடு கல்வி வலயத்தில் 38 பாடசாலை வரவேண்டிய அதிபர்கள் 38 ஆனால் 44 அதிபர்கள் வந்துள்ளனர் என்றும்,
தீவகம் 55 பாடசாலைகள், 55 அதிபர்கள், வந்தவர்களின் எண்ணிக்கை 53 பேர். ஆனால் வரவு 100வீதம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்ள பொய்மான தகவல்களை வடமாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டு வருவதாக அதிபர் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.