Sat. May 24th, 2025

வடமராட்சி முள்ளிப் பகுதியில் விபத்து

வடமராட்சி முள்ளிப் பகுதியில் விபத்து நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி துன்னாலை முள்ளிப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்துடன் மோதியதில் நால்வர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவத்தில் தாமோதரன் ஜசீந்திரன் (வயது 35), ஜசீந்திரன் ஜதிரோசா (வயது 25), ஒன்றரை வயது தீபத், தேவராசா நிலேக்கா (வயது 30) ஆகியோரே படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்