வடமராட்சி கிழக்கில் பட்டத் திருவிழா
வடமராட்சி கிழக்கில் தைப்பொங்கல் தினத்தன்று பட்டத் திருவிழா நடைபெறவுள்ளது.
வடமராட்சி கிழக்கில் தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ம் திகதி கட்டைக்காடு சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் பிற்பகல் 3மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு போட்டி நிகழ்வாகவும் நடைபெறவுள்ளதால், 1ம் இடத்தை பெறுபவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவும், இரண்டாம் இடத்தைப் பெறுபவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாவும், மூன்றாம் இடத்தை பெறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்குவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.