வடமராட்சி கடலில் பெருமளவு கஞ்சா கைப்பற்றப்பட்டது

வடமராட்சி கடற்பரப்பில் 338 கிலோ 420 கிராம் கஞ்சா போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறைக்கும் தொண்டைமானாறுக்கும் இடையிலுள்ள கடற்கரை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தேடுதல் நடாத்திய போது 147 பைக்கற்றுக்கள் கொண்ட 338 கிலோ 420 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் வடமராட்சி சக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.