Fri. Mar 29th, 2024

வங்கி, வழிமண்டல உத்தியோகத்தர்களுக்கு தொற்று

நெல்லியடி பகுதியில் இயங்கும் NDB வங்கியில் துப்பரவு பணியில் ஈடுபடும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கியில் பணிபுரிந்த உத்தியோகத்தர்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த துப்பரவு தொழிலாளி பெண் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடமைக்கு வருபவர் எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன் கரவெட்டி தெற்கு பகுதியில் வசிக்கும்  வளிமண்டலத் திணைக்களத்தில் கடமை புரியும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளானவர் அப்பகுதியில் இடம்பெற்ற திருவிழா நிகழ்வில் கலந்து கொண்டமை தெரியவந்துள்ளது.  இதனையடுத்து குறித்த தினத்தில் திருவிழா நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்