Sat. Apr 20th, 2024

வங்கி முகாமையாளர் உட்பட 13 பேருக்கு தொற்று

வங்கி முகாமையாளர், நகர சபை ஊழியர்கள் உட்பட இன்று  வடமராட்சி பகுதியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று பருத்தித்துறை நகர் பகுதியில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் வங்கிகள்,  தபால் நிலைய ஊழியர்கள், நகர சபை மற்றும் கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் என ஒவ்வொரு நிறுவனங்களில் இருந்தும் 5 பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பருத்தித்துறை நகர் பகுதியில் இயங்கும் தனியார் வங்கி முகாமையாளர் மற்றும் வங்கி தொழிலாளர் ஒருவருக்கும், நகர சபை ஊழியர்கள் இருவருக்கும், அத்துடன் நோய் அறிகுறிகளுடன் வருகை தந்த பொதுமக்களில் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் நேற்று 49 பேருக்கு பிசிஆர் மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வல்வெட்டித்துறை பகுதியில் நோய் அறிகுறிகளுடன் வருகை தந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 6 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 33 பேருக்கு பிசிஆர் மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்