Thu. Apr 25th, 2024

ரணில் பதவி நீக்கம் பயங்கரமானதாக இருக்கும்-வன்முறை தலை தூக்கும் – ஹிருணிகா

கோட்டாபய பதவி நீக்கப்பட்டது மாதிரி அல்லாமல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் பயங்கரமானதாக இருக்கும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மீண்டும் மக்கள் பாரிய விலையேற்றம் காரணமாக கோபமடைந்திருப்பதாகவும் அடுத்த அரககலயை
போராடடம் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரணில் பதவி நீக்கம் முன்னர் கோத்தபாயாவுக்கு நிகழ்ந்தது போலல்லாமல் மிகவும் பயங்கரமாக இருப்பதுடன் , இதன் முடிவில் ரணில் சிறைச்சாலையில் இருப்பார் என்றும் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் செல்வந்தர்களின் சொத்துக்களை சூறையாடுவார்கள் என்றும் தற்பொழுது அது கொழும்பின் சிலப்பகுதிகளில் சிறிய அளவில் இடம்பெற்று வருவதுடன் நாளைடைவில் இது மிக பெரிய அளவில் இடம்பெறும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்