யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட அணித் தெரிவு
தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிக்கான யாழ் மாவட்ட அணித் தெரிவு எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ளது.
இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் 22,23ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட அணிக்கான வீராங்கனைகளின் தெரிவு எதிர்வரும் 08ம் திகதி யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே யாழ் மாவட்டத்தில் உள்ள சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனைகள் இத் தெரிவில் பங்கு பற்றுமாறு யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் செயலாளரும், இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உப செயலாளருமான அபிதா அறிவித்துள்ளார்.