Thu. Jan 23rd, 2025

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் தொடா் துணிகர திருட்டு, மாட்டிய திருடனுக்கு தா்ம அடி.

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து தொடா்ச்சியாக தனது கைவாிசையை காட்டிவந்த தொலைபேசி திருடனை வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியா்கள் மடக்கி பிடித்து பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மருத்துவ சேவையாளா்களின் தொலைபேசிகளை தொடா்ச்சியாக திருடிவந்த இளைஞன் இன்று கையும் களவுமாக மாட்டியுள்ளாா்.

வைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஒருவாரத்துக்குள்

மருத்துவ சேவையாளர்கள் இருவரின் தொலைபேசிகள் திருட்டுப் போயிருந்தன. வெளிநோயாளர் பிரிவின் மருந்தகத்தில் பணியாற்றும் மருந்தாளர் ஒருவரின் தொலைபேசி கடந்த வியாழக்கிழமை திருட்டுப்போயிருந்தது.

கடந்த சனிக்கிழமை 10ஆவது நோயாளர் விடுதியில் மருத்துவர் ஒருவரின் தொலைபேசி இவ்வாறு திருட்டுப் போயிருந்தது. இந்தச் சம்பவங்களையடுத்து வைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உஷார் அடைந்தனர்.

மருத்துவ சேவையாளர்கள் இருவரினது தொலைபேசிகளையும் திடிய அதே இளைஞன் இன்று 27ஆவது விடுதியில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தரின் அலைபேசியை திருடிக்கொண்டு தப்பி ஓடிய வேளை

பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பிடிக்கப்பட்டார். அவர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்