யாழ்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி
காரைநகர் யாழ்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ரன் கல்லூரி அதிபர் திருமதி.கெளரிஅம்பாள் அருள்மொழி அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திருஞானசம்பந்தப்பிள்ளை ஞானசுந்தரன், கெளரவ விருந்தினராக காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி தயானந்தன் துஷ்யந்தன், கெளரவ விருந்தினராக யாழ்ற்ரோனியன் கந்தையா விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.