Thu. Apr 25th, 2024

யாழில் கோடீஸ்வரரும் யுவதியும் கழுத்தில் சுருக்கிட்ட நிலையி்ல் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபரும் அவரின் கடையில் பணிபுரிந்த யுவதியும் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சந்தோஸ் நகைக்கடை மற்றும் நியுமைதிலி நகைக்கடை போன்றவற்றின் முதலாளியும் அவரது நகை கடையில் பணிபுரிந்த இளம் யுவதியும் தற்கொலை செய்துள்ளார்.
இருவரும் சுமார் ஓரிரு மணித்தியால இடைவெளியில் தற்கொலை செய்துள்ளனர்.
நாவாந்துறையை சேர்ந்த 22 வயதான யுவதியொருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்தார். அவர் நகைக்கடையில் பணிபுரிந்தவர். இவர் இன்று நகைக்கடைக்கு வரவில்லை என்பதும், அவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமையும் தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் நகைக்கடை தொழிலதிபர் மதியமளவில் உணவருந்திவிட்டு வருவதாக கூறி சென்றவர் தனது வீட்டில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாவலர் வீதி, ஆனைப்பந்தியில் உள்ள தனது வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவி, பிள்ளைகள் தற்போது கொழும்பில் தங்கியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
 நான்கு பிள்ளைகளின் தந்தையான இவரது தற்கொலை யாழ் நகர வர்த்தகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்