மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்
இந்த சம்பவம் தனங்களப்பு வீதியில் சாவகச்சேரி மீன் சந்தைக்கு அருகாமையில் 7/1/2020 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம் பெற்றது
கண்டுவில் வீதி சாவகச்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணன் யோகம்மா வயது 50 என்பவரே காயமடைந்தவராவார்
மீன் வியாபாரத்தை முடித்துக்கொண்டு சந்தையில் இருந்து வெளியே வந்தபோது தனங்களப்பு பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது