மைத்திரியுடன் நேரடி முரண்பாடு!! -பதவி துறக்க முனைகிறார் ருவன் விஜயவர்தன-
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பமைச்சின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவை கடுமையாக விமரிசித்துள்ள ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன பதவியை இராஜினாமா செய்ய ஆலோசித்து வருகிறார்.
தனது ஆலோசனையின்றி ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பமைச்சின் கீழ் கொண்டுவந்தமை மற்றும் எந்த காரணங்களுமின்றி அதனை செய்தமை , ரூபவாஹினி தலைவர் பதவிக்கு தாம் நியமித்த ஒருவரை பதவியேற்கவிடாமல் செய்தமை உள்ளிட்ட காரணங்களால் அவர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
