Sat. Apr 11th, 2026

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் மீட்பு

முள்ளிவாய்க்காலில் இருந்து விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறித்த கொடிகள் மற்றும் சீரூடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக முல்லைதீவு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளார்கள் . பொதி செய்யப்பட்ட நிலையில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த இந்த பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது. காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியினை கனரக இயந்திரம் கொண்டு சுத்திகரித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .
முல்லைதீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கிருந்து விடுதலைப்புலிகளின் இரண்டு புலிக்கொடிகளும் மற்றும் இராணுவ சீருடைகள் இரண்டும் இரண்டு தொப்பிகளும் ஆகியவற்றை மீட்டு சென்றுள்ளனர்.
இந்த இராணுவ சீருடைகளில் ஒன்று சிறுவர் ஒருவரின் அளவில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed