Sat. Apr 20th, 2024

முல்லைத்தீவு மாவட்டத்தில் கராத்தே தரப்படுத்தல் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்ட கராத்தே  வீரர்களுக்கான தரப்படுத்தல் (பட்டி) வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
JKS கராத்தே கழகத்தினரால் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப் பிரிவினரின் ஆதரவுடன்  முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகளுக்கு கராத்தே பயிற்சி மற்றும் தரப்படுத்தல்
(பட்டி) வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தேசின்தன் ஆசிரியரனால் பயிற்சி வழங்கிய மாணவர்களுக்கு கழகத்தின் தலைமை ஆசிரியரும் பிரதம பொறியியலாளருமான ரோசி ஹரிந் பிரதம பொறியியளாளர் அவர்களினால்
தரங்கணித்து சான்றிதழ்களும் பட்டிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம கணக்களர் ஜேசுறெஜினொட், பிரதி கல்விப் பணிப்பாளர், திருமதி வசிகரன்  மாவட்ட அனர்த்த முகாமை பிரதி பணிப்பாளர் கலந்து சிறப்பித்ததோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லை நகர கல்விப்பாடு, உணாப்பிலவு, செல்வபுரம் பகுதிகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறார்கள் என
அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்வில் பங்குகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்