Tue. Apr 23rd, 2024

முல்லைத்தீவில் யுவதியை காணவில்லை

முல்லைத்தீவு தென்னியங்குளம் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தனது மகள் காணாமல் போயிருப்பதாக அவரது தாயார் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் தென்னியங்குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த யுவதி ஒருவர் காணாமல் போயிருப்பதாக அவரது தாயாரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்