Fri. Jan 17th, 2025

முறுக்கும் சுதந்திர கட்சி , இறங்கி வருவாரா மஹிந்த

சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் ‘தாமரை மொட்டு ‘அல்லாத பொதுச் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் . அவ்வாறு பொது சின்னத்துக்கு உடன்பாடு எட்டப்படாவிட்டால் சு.க தனித்து போட்டியிடும் நிலைமையே ஏற்படும் என்று சு.கவின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஹெட்டிபொல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த கால அரசியல் வரலாற்றை நோக்கும் போது கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் போது பிரதான கட்சியின் சின்னம் கூட்டணியின் சின்னமாக காணப்பட்டது. காரணம் கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகள் பாதிக்கப்படும் என்பதாலாகும்.

அனால் 1994 ஆம் ஆண்டு ஆட்சியமைக்கப்பட்ட போது கதிரை சின்னத்திலேயே போட்டியிட்டோம். சுதந்திர கட்சி பிரதான கட்சியாக இருந்தும் கூட நாம் கை சின்னத்தை பயன்படுத்தவில்லை. . அதே போன்று 2010 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட்ட போது அவரும் கை சின்னத்தை பயன்படுத்தவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சின்னமாக வெற்றிலை சின்னத்தை தேர்வு செய்து அவர் போட்டியிட்டார். இந்த சின்னத்தைப் பாவித்து அவர் தேர்லிலும் வெற்றி பெற்றார். தற்போது பொதுஜன பெரமுன பிரதான கட்சி போன்று காணப்படுகிறது. எதிர்காலத்தில் இதில் மாற்றங்கள் ஏற்படுமா என்று கூற முடியாது. எவ்வாறிருப்பினும் அந்த கட்சியின் சின்னத்தின் கீழ் சுதந்திர கட்சி தேர்தலில் போட்டியிடாது . தாமரை மொட்டு சின்னம் இல்லாத வெறு எந்த சின்னமாக இருந்தாலும் அதற்கு நாம் சம்மதம் தெரிவிப்போம்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்