முகமாலை விபத்தில் ஒருவர் பலி
முகமாலை இத்தாவில் ஏ9 வீதியில் அரச பேருந்துடன் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் அப்பகுதியில் சயிக்கிள் திருத்தும் கடை வைத்திருக்கும் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கோவில்காடு இத்தாவில் பகுதியைச் சேர்ந்த முத்தையா கந்தசாமி (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது கடையை முடித்து விட்டு வீதியால் வந்து கொண்டிருந்த போது, கண்டியில் இருந்து யாழ் நோக்கி வந்த அரச பேருந்துடன் ஏற்பட்ட விபத்திலே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக பளை பொலீஸாரால் அரச பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.