மின்சாரம் தாக்கியதில் துருக்கி நாட்டு இளைஞர் சாவு!!

ஜாஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் சாவடைந்துள்ளார்.
19 வயதுடைய துருக்கி நாட்டை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
ஆடை தொழிற்சாலை ஒன்றில் இயந்திரம் ஒன்றை பொருத்துவதற்காக வருகை தந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.