Sat. May 24th, 2025

மாணவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்வோர் பணிநீக்கம் செய்ய வேண்டும். உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்

மாணவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்வோர் பணிநீக்கம் செய்ய வேண்டும். உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார் .

மாணவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்வோர் செயல்படுத்த முயல்வோரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர்கள் என்பவர்கள் தொழிலாளர் அல்ல அதற்கு மேலாக ஒரு சமூகத்தின் கட்டுமானத்திற்காக நல்ல பிரஜைகளை உருவாக்கும் அர்ப்பணிப்பு மிக்க தொழிலாகும். இங்கு மாணவர்களும் ஆசிரியர்களை முழுமையாக நம்பி தமது குடும்ப பிரச்சனையில் இருந்து தனது சமூக தனிப்பட்ட பிரச்சனைகளை ஒப்புவிக்கின்றனர். இதனை ஆசிரியர்கள் புரிந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் குழந்தைகள் இந்தப் பருவத்தில் சரி பிழையை பிரித்துப் பார்க்க முடியாதவர்கள் ஆசிரியர்களை நூறு வீதம் நம்பிக்கொள்ளு கின்றனர். ஆசிரியர்களையே சிறந்த வழிகாட்டியாக பின்பற்றுபவர்கள். வேலியே பயிரை மேய்ந்தால் பயிரை அகற்ற முடியாது வேலியையே அகற்ற வேண்டும். கல்விபுலம் என்பது கல்வியுடன் சமூக விழுமியங்களை பண்பாடு, நாகரீகத்தை கற்றுக்கொடுப்பது அதனை பின்பற்ற தவறுபவன் ஆசிரிய தொழிலுக்கு தகுதி அற்றவன். தற்போது நடைபெறும் பிரச்சனை ஆசிரியரும் அல்ல பயிற்றுநரும் அல்ல காவலாளி அவருக்கு பயிற்றுநர் அங்கீகாரத்தை வழங்கியவர்கள் பொறுப்பு கூறவேண்டும். சிறுவர்களை சின்னாபின்னமாக்கும் சிந்தனை சமூகத்தை சிதைக்கும் சிந்தனையே. கல்விக்காக பாலியல் இலஞ்சம் கோரும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள காமுகர்களும் அகற்றப்படவேண்டும். அப்பாவி மாணவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் உண்டு என கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்