Thu. Jul 17th, 2025

மத்திய கல்லூரி அணிகளுக்கான சிநேக பூர்வமான ஆட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி வெற்றி

நெல்லியடி மத்திய கல்லூரியின் லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 16 வயதுப் பிரிவினருக்கு நடைபெற்ற சிநேக பூர்வமான ஆட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றது.

நெல்லியடி மத்திய கல்லூரியின் உதைபந்தாட்ட அணியை மேம்படுத்தும் நோக்கில் நெல்லியடி மத்திய கல்லூரி அணிக்கும் யாழ் மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான கால்பந்தாட்ட போட்டி இன்று நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதல் பாதியாட்டத்தில் யாழ் மத்திய கல்லூரி அணி வீரர் கர்சோன் முதல் கோலைப் பதிவு செய்ய அடுத்த சில நிமிடங்களில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி வீரர் அர்ச்சயன் ஒரு கோலைப் பதிவு செய்து ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார்.
இதனால் முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதினர். இருப்பினும் நெல்லியடி மத்திய கல்லூரி வீரர் விதுசன் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்