Fri. Mar 29th, 2024

பொலீஸாருக்கும் பெற்றோல் வழங்க எதிர்ப்பு – பெற்றோல் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்

யாழ் மணிக்கூடு கோபுர நிலையத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பெற்றோல் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தி வைக்குமாறு பொலீஸ் அதிரடிப் படையினர் அறிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று யாழ் மணிக்கூடு கோபுர எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்றது.
பெற்றோல் நிரப்புவதற்காக பலர் காத்திருந்த வேளையில் யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களுக்கு பெற்றோல் வழங்கமுற்பட்ட போது அங்கு நின்றவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் பலர் பல மோட்டார் சையிக்கிளில் வந்து பெற்றோல் நிரப்பிச் செல்வதை அவதானிக்க முடிந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனையடுத்து மோட்டார் சையிக்கிளில் வந்த பொலீஸார் பெற்றோல் நிரப்ப முற்பட்ட வேளை பொலீஸாருக்கு பெற்றோல் வழங்குவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இரு பொலீஸார் சென்ற போதிலும் ஒரு பொலீஸ் உத்தியோகத்தர் தனது மோட்டார் சையிக்கிலுக்கு பெற்றோல் நிரப்புமாறு கூறிய போதிலும் எரிபொருள் நிரப்பு ஊழியர் பெற்றோல் நிரப்ப தயக்கம் காட்டினார். இதனால் எனக்கு தராத பெற்றோல் எவருக்கும் வழங்க கூடாது என கூறிச் சென்று விட்டார். அதன் பின்னர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்த பொலீஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து எவருக்கும் பெற்றோல் வழங்க வேண்டாம் எனக் கூறிச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்