Tue. Apr 23rd, 2024

பொலிகண்டியில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்

உடல் எரிந்த நிலையில் வீட்டில் இருந்து வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை வல்வெட்டித்துறை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி இ.த.க.பாடசாலைக்கு (பாலாவி) அண்மையில் உள்ள ஒருவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த நடராசா பரமேஸ்வரி (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காலை 6 மணியளவில் வீட்டின் சமையல் அறையை திறந்த போதே தாயார் எரிந்த நிலையில் இறந்து கிடந்ததாகவும் பிள்ளைகளால் பொலீஸாருக்கு வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்