Thu. May 21st, 2026

பெருமளவில் மணல் அகழ்வு – ஜனாதிபதிக்கு கடிதம்

புதிய அரசாங்கம் மணல் போக்குவரத்து அனுமதியை ரத்து செய்த பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் கிளினோச்சி மாவட்டங்களில் பெரிய அளவில் மணல் அகழ்வு நடைபெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ) நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, வடக்கில் பல பகுதிகளில் மணல் அகழ்வு மற்றும் போக்குவரத்து மோசடிகள் நிகழ்வதாகவும், லாரிகள் மற்றும் டிராக்டர்களளில் மணலை ஏற்றிக்கொண்டு வீதிகளில் தாறுமாறாக பயணிப்பதாக கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார் .

யாழ்ப்பாணம் மற்றும் கிலளினோச்சி மாவட்டங்களில் மருதங்கேனி, பளை மற்றும் கராச்சி பிரதேச செயலகங்களினால் மண் அகழ்வு பெருமளவில் நிகழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பளை பிரதேச செயலகப் பகுதியில் உள்ள கிளாலி, அல்லிப்பளை, புலோபலை, ஐயக்கச்சி, மண்டுவில், சுந்திகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் நிலங்களில் மணல் அகழ்வு அதிகரித்து வருவதாக அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed