இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பெண்ணிடமிருந்தே 1.25 கிலோ கிராம் நிறையுடைய கொக்கேய்ன் மீட்கப்பட்டுள்ளது.
37 வயது மதிக்கத்தக்க இந்திய பெண் ஒருவர் சென்னையில் இருந்து இலங்கை வந்தபோது கட்டுநாயக்கா விமானநிலையப்பகுதில் வைத்து விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இதன் பெறுமதி இலங்கை பணத்தில் 18 மில்லியனுக்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.