Fri. Apr 19th, 2024

பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு 14 நாட்கள் விளக்க மறியலில்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை 2 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்குமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக சிறுமியை பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கியமை
தொடர்பாக பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நேற்று செவ்வாய்கிழமை பருத்தித்துறை பொலீஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியை வன்புணர்விற்குள்ளாக்கிய போது, அதை காணொலியாக எடுத்து, அதை வைத்து மிரட்டியே இந்த கொடூரத்தை தொடர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து, அப்போது 17 வயதாக இருந்த சிறுமியை தமிழ் பொலிஸார் அழைத்துச் சென்று ஆட்களில்லாத வீட்டிற்கு வைத்து பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
பொலீஸ் உத்தியோகத்தர் குறித்த சிறுமியை பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கிய போது வீடியோ எடுத்ததாகவும், அதனை கிராம இளைஞர்களுக்கு அனுப்பி,  அவர்களும் வன்புணர்விற்கு முயன்றதாகவும் கூறிய முறைப்பாட்டை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த பொலீஸ் உத்தியோகத்தர் சம்பவம் நடைபெற்ற போது வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையத்திலும், அதன் பின்னர் தெல்லிப்பளை பொலீஸ் நிலையத்திலும் தற்போது முருங்கன் பொலீஸ் நிலையத்திலும் கடமையாற்றி வருபவர் எனத் தெரிய வந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்