பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவை கைது செய்து சிறையில் அடைக்க சிஐடியின் முயற்சி
பொது ஜன பெரமுனாவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவை கைது செய்து சிறையில் அடைக்க சிஐடியின் முயற்சி செய்கிறார்கள் . இது தொடர்பாக இரண்டு உயர் அதிகாரிகளுக்கும் மூன்று உயர் அரசாங்க அரசியல்வாதிகளுக்கும் இடையே ஒரு உயர் மட்ட சந்திப்பு அ ஒன்று நடைபெற்றது.
பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, வாசிம் தாஜுதீன் படுகொலை அல்லது பிரஜீத் ஏக்னலிகோடா காணாமல் போனது போன்ற வழக்குகளில் ஒன்றில் கோதபய ராஜபக்ஷவை கைது செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்று இந்த மூன்று அரசியல்வாதிகளும் சிஐடியிடம் கேட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களில் ஏதேனும் ஒன்றுடன் சம்பந்தப்படுத்தி உடனேயே கோதபய ராஜபக்ஷவை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிஐடி அதிகாரிகளுக்கு மூன்று அரசியல்வாதிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.
இரண்டு சிஐடி அதிகாரிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் வெளிநாட்டில் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அரசியல்வாதிகள் உறுதி அளித்துள்ளார்கள் .